மல்லிப்பட்டினம் மக்தப் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய தர்கா கமிட்டியினர்.!
தஞ்சாவூர்

மல்லிப்பட்டினம் மக்தப் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய தர்கா கமிட்டியினர்.!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் மக்தப் மதரஷாவின் 9 ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் மக்கள் ஆசிரியர்களுக்கு ஹொஸ்ஸாலி தங்கள் தர்கா கமிட்டியினர் நினைவு பரிசு வழங்கினர்.
மல்லிப்பட்டினம் மக்தப் மதராஷா ஆண்டு விழா நிகழ்ச்சி முகைதீனர ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் இரண்டு தினங்களாக நடைபெற்றது.இறுதிநாளான நேற்று(மே.15) மல்லிப்பட்டினம் தர்கா கமிட்டியினர் சமுதாய நலமன்றத்தினருக்கு நினைவு பரிசு கேடயம் வழங்கி கௌரவித்தனர்.மேலும் மக்தப் மதராஷா மாணவர்களின் திறனை வெளிப்படுத்தி சிறப்பான பயிற்சியளித்த மக்தப் மதராஷா ஆசிரியர்களை கௌரவித்தும் நினைவுப்பரிசுகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் தர்கா கமிட்டியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் இருந்தனர்.
செய்தியாளர்
அசாருதீன்