பாபநாசம் ஸ்ரீ சுந்தர சோழ விநாயகர் ஆலய 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. !

பாபநாசம்

பாபநாசம் ஸ்ரீ சுந்தர சோழ விநாயகர் ஆலய 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. !

பாபநாசம் ஸ்ரீ சுந்தர சோழ விநாயகர் ஆலய 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சிவ சங்கீதம் திருமண மண்டபத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுந்தர சோழ விநாயகர் ஆலய 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமங்களும் மஹா பூர்ணாஹுதி 108 சங்காபிஷேகம் கலசாபிஷேகம் நடைபெற்ற ஸ்ரீ சுந்தர சோழ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவ சங்கீதம் பேலஸின் உரிமையாளர் உத்தாணி சிவலிங்கம் மற்றும் குடும்பத்தினர் சங்கீதா சிவலிங்கம் ராகுல் ஆகியோர் செய்திருந்தனர்.

பாபநாசம் இன்பம்