அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிணவறை கோரி நகரமன்ற தலைவருக்கு சிபிஐ கோரிக்கை

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிணவறை கோரி நகரமன்ற தலைவருக்கு சிபிஐ கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு தமிழக அரசு நகராட்சியை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கு தகுந்த கட்டிடம் கிடையாது.

அதை புதிதாக அமைத்துக் கொடுக்க வேண்டியும்  அதுபோல விபத்துகளால் மரணம் அடைந்த  அடையாளம் தெரியாத பிரேதங்களை உடல் அடையாளம் காணும் வரை  பதப்படுத்துவதற்கு குளிர்சாதன பெட்டி அரசு மருத்துவமனையில் இல்லை வெளியில் வாடகைக்கு எடுத்து உபயோகப்படுத்தும் நிலையில் அரசு மருத்துவமனை உள்ளது என்பதை கருத்தில் கொண்டும்

அதிராம்பட்டினம் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி சிறப்பாக செயல்படக்கூடிய நகராட்சிக்கு அரசு மருத்துவமனை இன்றைய நிலை உகந்ததல்ல என்பதை தெரியப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ் கட்சியின் நகர செயலாளர் ஹாஜா மைதீன் நகரமன்ற தலைவருக்கு மனு அளித்துள்ளார்.

மேலும் நகராட்சி தலைவர் துணைத் தலைவர் இதை கவனத்தில் கொண்டு சிறப்பாக செயல்படக் கூடியநகராட்சி மூலமாக  உடனடியாக பிரேத பரிசோதனை கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டியும் குளிர்சாதனைப் பெட்டி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளார்.

 ஆசிரியர் & வெளியீட்டாளர்

விளம்பரம் & செய்தி தொடர்புக்கு

97 87 41 64 86