தாம்பரம் மாநகர காவல் சார்பில் பொங்கல் பண்டிகை
சென்னை
தாம்பரம் மாநகர காவல் சார்பில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவில் தலைமை செயலாளர் உறியடித்து அசத்தல்.
2024ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னை செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் தாம்பரம் மாநகர காவல் சார்பில் காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதில் தலைமை செயலாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர். காவல் ஆணையர் பாரம்பரிய உடை அணிந்து, கிராமம் போல் வடிவமைக்கப்பட்ட வீடு, மாட்டு கொட்டகை, ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தார்.
காவல்துறையினருக்கு கபடி, உறி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, ரங்கோலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
தலைமை செயலாளர் கண்ணை கட்டிக் கொண்டு உறியடித்து அசத்தினார்.
2024ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர்கள் தயாள், சந்துரு, ஆல்பின்ராஜ் உள்ளிட்டோருக்கு தலைமை செயலாளர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த ஆணையர், பல்வேறு விளையாட்டு போட்டிகளை விளையாடினர். துப்பாக்கி சுடுதல், வளையம் போடுதல், வில் எய்தி சிறப்பித்தார்.
பொங்கல் விழாவில் தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பொங்கலை உறசாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.