ஒன்றிய அரசின் கல்வி திணிப்பை எதிர்த்து பள்ளிக் கல்வி துறை ஆலோசனைக் கூட்டம்.!

பள்ளிக் கல்வி துறை

ஒன்றிய அரசின் கல்வி திணிப்பை எதிர்த்து பள்ளிக் கல்வி துறை ஆலோசனைக் கூட்டம்.!

ஒன்றிய அரசின் அமைச்சர் சர்வாதிகார போக்கில் பேசியுள்ளார்.இது சம்பந்தமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை.!

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றியக் கல்வித்துறை அமைச்சர் பேசியுள்ளார்.

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்ததோடு மட்டுமல்லாமல், மொழி திணிப்பிற்கான முயற்சியையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு
பள்ளிக் கல்வித்துறைக்கு தரவேண்டிய நிதியை தராமல் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

இது தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )