மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட மக்களின் மனுக்கள் மீதான குறை தீர்ப்பு முகாம் .!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட மக்களின் மனுக்கள் மீதான குறை தீர்ப்பு முகாம் .!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மரு. கார்த்திகேயன் இ.கா.ப. உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னுசாமி, பொறுப்பு மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டம் சார்பாக நடைபெற்ற மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் காரமடை தென்திருப்பதி நால் ரோட்டில் உள்ள RKKR திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, சிறுமுகை, அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் நிலையங்களைச் சார்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து 116 மனுக்களில் 105 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )