மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1993 பாகம் - 2
சட்டம்

காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெறுவதாக சொல்லப்படும் அரசுத் துறைகளில், காவல் துறை முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதற்கு எதிராக கூறப்படும் சில குற்றச்சாட்டுகள்
சித்ரவதை
சட்டத்திற்கு புறம்பாக சிறை வைத்தல், கைது செய்தல், தவறான சித்தரிப்பு அதாவது புனையப்படும் வழக்குகள்
எதிர் தாக்கு இறப்புகள் ( என்கவுன்டர் டெத்)
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் / பாலியல் கொடுமைகள்.
பொய் வழக்கு போடுதல் / வழக்கை பதிவு செய்ய மறுத்தல்
https://www.newstodaytamil.com/The-Protection-of-Human-Rights-Act---1993---Part---1
காவல் துறை என்ற பொதுப்பிரிவுக்குள் அடங்கும் ஆயுதப்படை, துணை ராணுவம் மற்றும் சிறைத்துறையினர் மீதும் குற்றச்சட்டுகள் சொல்லப்படுகின்றன. சரியாக உணவு கொடுக்காதது, பிணைக் கைதிகள் மரணம் ( லாக் அப் டெத்) , சரியான மருத்துவச் சிகிச்சை தராதது போன்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
காவல் துறையினர் மீது சொல்லப்படும் பெரும்பான்மையான புகார்கள், அவர்கள் கொடுமையாக நடந்து கொள்வதை பற்றியும், கடுஞ்சொற்கள், வசை மொழிகள் உபயோகிப்பது பற்றியுமே மக்களால் அதிக அளவில் எழுப்பப்படுகின்றன.
அரசு துறைகளோடு ஒப்பிடும் போது, காவல் துறையோடு பொதுமக்களுக்கு குறைந்த சதவீத அளவிற்குதான் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த துறைக்கு (காவல் துறை) எதிராக எழும் புகார்கள் 70 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.
மனித உரிமைகளை பாதுகாக்க, தேசிய மனித உரிமை ஆணையமும் ( பிரிவு 3 ) , மாநில மனித உரிமை ஆணையமும் (பிரிவு 21) ஆகியவை உள்ளன.
மு.ர. தொடரும்
சட்டம், குற்றம்,மருத்துவம் என பல விசயங்களை எழுதுவதன் நோக்கம் அனைவரும் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே.!
ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தை அறிந்து வைத்திப்பது கடமயே. அதன்படி எழுதுகிறேன்.
அறிந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் அறியச் செய்யுங்கள் இந்திய அரசியலமைப்பின்பால் உள்ள சட்டங்களை
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)
தொடர்புக்கு
97 87 41 64 86