ஊழல் தடுப்புச் சட்டம் - 1988 பாகம் - 2

Prevention of Corruption Act

ஊழல் தடுப்புச் சட்டம் - 1988 பாகம் - 2

அரசுப் பணியாளர் எப்போது ஊழல் குற்றம் செய்ததாகக் கருதப்படுவார். (பிரிவு 13 )

Criminal Misconduct by a Public Servant 

1. அரசுப் பணியாளர் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ சட்டப்படியான பணி ஊதியம் தவிர்த்து பிற வகைகளில் மற்றவர்களிடம் வெகுமதியைத் தொடர்ந்து பெறுபவராக இருந்தால், அல்லது வெகுமதியை கேட்டுப் பெறுபவராக இருந்தால், அல்லது வெகுமதியை ஏற்க உடன்படுபவராக இருந்தால் அல்லது வெகுமதியை கேட்டுப் பெற முயற்சிப்பவராக இருந்தால்

2 . தான் சார்ந்த அரசுப் பணியை மையப்படுத்தி தம்மால் செய்யப்பட்டிருக்கும் அல்லது செய்யப்படவிருக்கும் நடவடிக்கை அல்லது செயலுக்காக எவரிடம் இருந்தும், தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலை உயர்ந்த பொருள் எதையாவது ஏற்பது அல்லது கேட்டுப் பெறுவது அல்லது ஏற்க உடன்படுதல் அல்லது கேட்டுப் பெற முயற்சிப்பவராக இருந்தால்..

3. அரசுப் பணியாளர் என்ற முறையில் தம்மிடம் அல்லது தம் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்களை மோசடியாகக் கையாடல் செய்வது அல்லது தனது சொந்தப் பயனுக்காக மாற்றிக் கொள்வது அல்லது யாரையாவது அப்படி செய்ய அனுமதிப்பது..

4. அரசுப் பணியாளர் என்ற தமது பதவி நிலையைத் தவறாகப் பயன்டுத்தி சட்டத்திற்கு புறம்பான வழிகளில் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலை உயர்ந்த பொருள் அல்லது பண மதிப்புள்ள பயன் எதனையும் பெறுதல்..

5. அரசுப் பணியாளர், தான் பதவி வகிக்கும் போது நலன் ஏதும் இல்லாமல், எவருக்காகவும் விலையுயர்ந்த பொருள் அல்லது பண மதிப்புள்ள பயன் எதனையும் கேட்டுப் பெறுதல்..

6. அரசுப் பணியாளர், தான் பதவியில் இருந்த காலத்தில், தன்னுடைய மற்றும் தன்னைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் சொத்து மற்றும் ரொக்கப் பணத்திற்கு முறையான கணக்கு காட்ட முடியவில்லை என்றால்.. 

மேற்கூறிய படி தவறுகளில் ஈடுபட்டிருந்தால் அந்த அரசுப் பணியாளர் யாராக இருந்தாலும் அவர்கள் ஊழல் குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார்.

                                                             தொடரும்