இந்திய குடியுரிமை சட்டம் - 1955 பாகம் - 1
சட்டம்

ஒருவர் ஒரு நாட்டின் பிரஜையாக இருப்பதற்கான உரிமையை குறிப்பது தான் குடியுரிமை.இந்த குடியுரிமையை மையப்படுத்தி ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமைகளை எடுத்து சொல்வது தான் இந்திய குடியுரிமை சட்டம்.
ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள குடியுரிமையை வைத்து , உயர்ந்த பட்சமாக சம்பந்தப்பட்ட நாட்டின் அரசியலில் பங்கு கொள்ளும் உரிமையும் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது.
குடியுரிமையை ஒரு நாட்டிற்கும் அந்த நாட்டின் பிரஜைக்கும் இடையிலேயான சமூக ஒப்பந்தக் கொள்கை என்றும் இதை கருதலாம்.அதன் அடிப்படையில் குடிமக்களில் ஒவ்வொருவருக்கும் சில கடமைகளும், பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
ஒரு நாட்டில் பிறப்பதன் மூலமும் குறிப்பிட்ட ஒரு நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதன் மூலமும் ஒருவருக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கிறது.இந்த குடியுரிமையை சில பல காரணங்களுக்காக ஒருவர் இழக்க நேரிடும் அல்லது ஒருவரிடமிருந்து சம்பந்தப்பட்ட நாட்டின் மைய ( மத்திய ) அரசால் குடியுரிமையை திரும்பப் பெற்று கொள்ளவோ முடியும்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியுரிமை தான் வழங்கப்படுகிறது.
மு.ர.
தொடரும்