பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.!

Fengal cyclone

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.!
C M. M.k.Stalin
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.!

ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசின் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தியிருந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் 25,000 உணவுப் பொட்டலங்களை விக்கிரவாண்டி தொகுதியில் விநியோகித்துள்ளார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 1 லட்சம் கிலோ அரிசியை அனுப்பி வைத்துள்ளார்.

சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ள 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.

https://www.newstodaytamil.com/Fengal-cyclone-visiting-minister-ss-siva-sankar