வேங்கைவாசல் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 2.53 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் மழைநீர் மூடு கால்வாய் .!

செங்கல்பட்டு

வேங்கைவாசல் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 2.53 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் மழைநீர் மூடு கால்வாய் .!

வேங்கைவாசல் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 2.53 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் மழைநீர் மூடு கால்வாய் .!

தலைமை ச.அரவிந்த் ரமேஷ் - ஏற்பாடு வீ.ஜெயச்சந்திரன்..

சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையர்மலை தெற்கு ஒன்றியம் வேங்கைவாசல் ஊராட்சியில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கான இடங்களை கண்டறிந்த ஊராட்சி நிர்வாகம் நேற்றைய தினம் வேங்கைவாசல் ஊராட்சியில் டி.வி.எஸ் எமரால்டு கட்டுமான நிறுவனத்தின் மூலம் 2025-2026 ஆம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 2.53 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் மழைநீர் மூடு கால்வாய் அமைக்கும் பணியினை சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  லயன்.ச.அரவிந்த் ரமேஷ் தலைமையில் வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில்  நடைபெற்றது.  

நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் வேலைகள் துரிதமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என ஒப்பந்ததாரர்களையும்,அரசு அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் ஒன்றிய செயலாளர் கோ.வெங்கடேசன் புனித தோமையார் மலை ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன்,வேங்கை வாசல் ஊராட்சி மன்ற தலைவர் வீ. ஜெயச்சந்திரன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.என்.அன்புமணி, ஒன்றிய கவுன்சிலர் மோகனப்பிரியா சரவணன்.மாவட்ட கவுன்சிலர்கள்  என்.வேதகிரி, அம்சவேணி குணா,வார்டு உறுப்பினர் சிவசங்கர்,
ஊராட்சி கிளைக் கழக செயலாளர் ஆனந்தன்  மற்றும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பொது மக்கள், கழக நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

  சுகுமாரன்