பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கல்வி உதவித் தொகை.!
செங்கல்பட்டு
பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கல்வி உதவித் தொகை.!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் கேளம்பாக்கம் ஜோதி நகர் ஊராட்சி தி.மு.க .கிளை கழக செயலாளரும் தொழிலதிபரும் சமூக சேவகருமான கே ஏ டி அன்பு மற்றும் ஜோதி நகர் கிளைக் கழக தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான தனக்கோட்டி அன்பு ஆகியோர் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயின்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் கல்வி உதவித்தொகையும், கல்வி உபகரணமாக புத்தகப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.
மேலும் மாணவர்களை சிறப்பாக பயில வைத்த பெற்றோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இதுபோன்று மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் கே ஏ டி அன்புவிற்கும் மற்றும் தனக்கோடி அன்புவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை பெற்றோர்களும், பொதுமக்களும் தெரிவித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கே.ஏ.டி அன்பு மற்றும் தனக்கோட்டி அன்பு குழுவினர் சிறப்புடன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
சுகுமாரன்