தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதா?' - சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி.!

தமிழகம்

தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதா?' - சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி.!
Governor C.P.Radhakrishnan

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது  "ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் மாநிலத்தின் உரிமை பறிபோகவில்லை. அப்படி உரிமை பறிபோகிறது என்றால் 1971ம் ஆண்டு கருணாநிதி சட்டமன்றத்தை கலைத்துவிட்டு ஏன் நாடாளுமன்றத்துடன் தேர்தல் நடத்தினார். 

அயோத்தியில் மசூதிக்காக வழங்கப்பட்ட நிலம் திரும்பபெற வேண்டும்! உ.பி முதல்வருக்கு கடிதம்! - 

அயோத்தியில் மசூதிக்காக வழங்கப்பட்ட நிலம் திரும்பபெற வேண்டும்! உ.பி முதல்வருக்கு கடிதம்.!

இதனால் மாநில அரசின் உரிமை பறிபோகிறது என்பது அவருக்கு தெரியாதா. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் தமிழ்நாட்டில் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள். அவர்களின் வேலை தான் இது.

இரண்டு கட்சிகளை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும்

தமிழ்நாடு எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. அந்த நபரின் இறுதி ஊர்வலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு அரசியல் தலைவர்கள் கலந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

அவர்களை தமிழ்நாடு மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை கொண்டாட முடியுமா. இது மிகவும் தவறு என்றும் கூறியுள்ளார்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், முறையாக பணியாற்றும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும்.

அதேநேரத்தில் கொலையாளிகளை ஊர்வலமாக கொண்டு சென்று மரியாதையுடன் புதைக்க நினைக்கும்போது எதிர்ப்பதும் சாதாரண குடிமகனின் கடமை." என்றும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.