மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் T.மாதர் கான் தலைமை தாங்கினார், ஆவுடையாபுரம் A.சிக்கந்தர் பாட்ஷா மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர வரவேற்புரையாற்றினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் M. அப்துல் கரீம், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் M. சாதிக் அலி மாவட்டத் துணைத் தலைவர் Y. ஷேக் முகமது மாவட்ட பொருளாளர் S. கமர்தின்,மாவட்ட துணைச் செயலாளர்கள் K. சல்மான் கான், A.முகமது அஜ்மல் கான் , M. அப்துல் வஹாப், பூலாங்கால் A.செய்யது இப்ராஹிம், M.ஜமால் முகமது, P. U. மைதீன் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பழனி M. I பாரூக சிறப்பான கண்டன உரை நிகழ்த்தினார்.
விருதுநகர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் P. நசீர் அகமது பைஜி, மதரஸா ரைய்யான் இமாம் சுல்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் A. குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர், P. லிங்கம், அருப்புக்கோட்டை திமுக நகர செயலாளர் A. K. மணி, காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட செயலாளர் M. சிவகுருநாதன், வாழவந்தபுரம் ஜமாத் தலைவர் பேராசிரியர் A. ஹாஜா நஜீமுதீன், திராவிட கழகம் மாவட்ட செயலாளர் விடுதலை ஆதவன் கண்டனை உரை நிகழ்த்தினர்.
மற்றும் நல்லூர் ஜமாத் தலைவர் A. சம்சுதீன், அருப்புக்கோட்டை 9வது வார்டு கவுன்சிலர் J.அகமது யாசிர் மேலும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், விருதுநகர் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் நகர வார்டு ஒன்றிய கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், நல்லூர் ஜமாத் பொதுமக்கள் வாழவந்தபுரம் ஜமாத் பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
சிறப்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை அருப்புக்கோட்டை மனிதநேய மக்கள் கட்சியின் நகரத் தலைவர் A.ஷேக் அப்துல்லாஹ், தமுமுக நகரச் செயலாளர் *R. சையது அலி மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் S. முகமது யூசுப் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர்
முகமது அன்சாரி