காங்கிரஸ் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.!
தென்காசி

காங்கிரஸ் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் நிகழ்ச்சி
தென்காசி ஏப்ரல் 15
தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், நன்னகரத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார் தலைமை வகித்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் குற்றாலம் பெருமாள், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், மோகன்
அருணாச்சலம், மாவட்ட துணை தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், சந்தோஷ், மீரான், நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், செங்கை கண்ணன்,ஆயிரப்பேரி லட்சுமணன்,மூர்த்தி, சுப்பிரமணியன், நகர துணைத் தலைவர்கள் சித்திக், தேவராஜன், நகர பொருளாளர் ஈஸ்வரன், குற்றாலம் அமானுல்லா,
ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்