தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பாகம் - 2
சட்டம்

பெற முடியாத தகவல் ( பிரிவு 8 )
மத்திய, மாநில அரசுகள் சார்ந்த தகவல்கள் அனைத்தையும் இச்சட்டத்தின் மூலம் பெறலாம் என்ற போதிலும், அவற்றிலும் சில விலக்குகள் சொல்லப்பட்டுள்ளன. அவை :
1. இந்த சட்டத்தின் கீழ் அடங்கிய தகவல் எது எவ்வாறாக இருப்பினும், பெறப்படும் அத்தகைய தகவல்களால் கீழ்கண்ட முறைகளில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கருதப்பட்டால் :
அ. நாட்டின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் படைத்திறன் சார்ந்த விஞ்ஞானம் அல்லது பொருளாதார நலன்கள், அயல்நாட்டு உறவை பாதிக்கும் அல்லது குற்றம் ஒன்றை தூண்டுவதாக இருந்தால்,
ஆ. நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் எதானாலும் வெளிப்படையாக தடை செய்யப்பட்ட அல்லது நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால்,
இ. நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற சிறப்புரிமையை மீறுவதாக இருந்தால்,
ஈ. பெருவாரியான மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக, வணிகத்தின் நம்பகத்தன்மை, வியாபார ரகசியங்கள் அல்லது அறிவுசார் சொத்துடைமை போன்றவற்றால், மூன்றாம் நபர் சந்தையில் போட்டியிடும் நிலைக்கு தீங்கு ஏற்படுத்துவதாக இருந்தால்,
உ. ஒரு நபரின் வாழ்க்கை அல்லது உடல் பாதுகாப்புக்கு அல்லது தகவலின் மூலத்தை அடையாளம் காண்பதற்கு சட்ட நிறைவேற்றம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இருந்தால்,
ஊ .புலன் விசாரணைக்கு அல்லது குற்றவாளிகளை கைது செய்வதற்கு அல்லது குற்ற வழக்கு தொடர்வதற்கு தடை ஏற்ப்படுத்துவதாக இருந்தால்...
இது தவிர
அமைச்சரவை, அரசு செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்களின் பதிவுருக்கள் மற்றும் அமைச்சரவை ஏடுகள்...
வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து ரகசியமாக பெறப்பட்ட தகவல்கள் போன்ற தகவல்களை பெற முடியாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பாகம் - 1
மு.ர.