கணவன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை-மகளின் காதலால் விபரீதம்.!
திருப்பத்தூ

திருப்பத்தூர் அருகே கணவன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை-மகளின் காதலால் விபரீதம்- ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை
திருப்பத்தூர் அடுத்த கீழ் குறும்பர் தெரு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜேகதேவி பகுதியை சேர்ந்த குமார் வயது (50) இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா வயது (45) இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களது மகள் காவியா (16) அதே பகுதியை சேர்ந்த கொண்டப்பன பள்ளி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தெரியவர ஊர் பொதுமக்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
காவியாவிற்கு வயது குறைவாக உள்ளதால் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் குழந்தை திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த காவியா பூச்சு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் மன வேதனை அடைந்த குமார் அவரது மனைவி கவிதா இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில்தான் இன்று விடியற்காலை திருப்பத்தூர் அடுத்த கீழ் குறும்பர் தெரு அறுகாமையால் ஜோலார்பேட்டை சேலம் செல்லும் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதை குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளின் காதல் விவகாரத்தில் மனமடைந்து கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
செய்தியாளர்
ந.வெங்கடேசன்