திருப்பத்தூரில் மாபெரும் எருது விடும் திருவிழா.!

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மாபெரும் எருது விடும் திருவிழா.!

திருப்பத்தூர் அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் மாபெரும் எருதுவிடும் திருவிழா 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறி பாய்ந்து ஓடின- வேலூர் சரக DIG தேவராணி நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் மாபெரும் எருதுவிடும் திருவிழா நடைப்பெற்றது.

இந்த எருதுவிடும் திருவிழாவில்,  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா,கர்நாடகா  உள்ளிட்ட  மாநிலங்களிலில் இருந்தும்  200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. 

மேலும் குறைந்த விநாடியில் சீறி பாய்ந்து ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு, முதல் பரிசாக 100000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 75000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 65000 ரூபாய் என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த எருதுவிடும் திருவிழாவை வேலூர் சரக காவல்துறை தலைவர்  டி ஐ ஜி தேவராணி நேரில் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். மேலும் இந்த எருதுவிடும் திருவிழாவில் இரண்டு SP , DSP 6, 470 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த எருதுவிடும் திருவிழாவில் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.‌

செய்தியாளர்

ந.வெங்கடேசன் 

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi (MR)