ஆல்கஹால் பரிசோதனை மெஷின் வாங்கி கொடுத்த தொழிலதிபர்.! பெற்றுக் கொண்ட காவல்துறை .!
கீழக்கரை

கீழக்கரை நகருக்குள் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றிய பின் ஏர்வாடி, திருப்புல்லாணி, மற்றும் இராமநாதபுரத்திற்கு இரு சக்கர வாகனங்களில் சென்று குடித்து வரும் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இதனால் வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு பெருநகரங்களில் வாகன சோதனைக்கென பயன்படுத்தும் ஆல்கஹால் பரிசோதனை மிஷின் வேண்டி கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மிஷினின் விலை ரூ 57ஆயிரம் ஆகும்.
இரண்டு மிஷின்களை கீழக்கரை உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் தொழிலதிபர் P.R.L. முகம்மது சலீம், தொழிலதிபர் M.முகம்மது காசீம் மற்றும் கிழக்கு தெருவை சேர்ந்த தொழிலதிபர் ரபீக் அகமது இணைந்து இரண்டு மிஷின்களை கீழக்கரை காவல்நிலையத்தில் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுதிர்லாலிடம் இரு மிஷின்களையும் ஒப்படைத்தனர்.
உடன் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் செயலாளர் சேக் உசேன் கீழக்கரை துணை ஆய்வாளர் வீர கணேசன் உடன் இருந்தனர்.
கீழக்கரை காவல் நிலையம் சார்பில் நகரில் சிறப்பாக சமூக பணியாற்றி வரும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் P.R.L.ஹாமீது இப்றாகீம், கௌரவத் தலைவர் P.R.L. சதக் அப்துல் காதர், செயலாளர் சேக் உசேன் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
காதர்