கீழக்கரை இரண்டு  நகர்மன்ற உறுப்பினர்கள் இன்றைய  கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு.

ராமநாதபுரம்

கீழக்கரை இரண்டு  நகர்மன்ற உறுப்பினர்கள் இன்றைய  கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு.

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை இரண்டு  நகர்மன்ற உறுப்பினர்கள் இன்றைய  கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு. அதில் 20வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சேக் உசேன் அவர்கள் பேசியதாவது.

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது சலவாத்தையும்  வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழக்கரை  நகர்மன்ற உறுப்பினர்கள் 21 பேரில் நானும் ஒருவன் எனும் போது கொஞ்சம் வருத்தப்படுகிறேன். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இதையாவது செவி சாய்த்து கேளுங்கள்.

நான் ஒவ்வொரு முறையும் நடக்கும் கூட்டங்களில் பேசுவது எதுவும் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் நடக்கிறது. கடந்த மாத கூட்டத்தில் நான் பேசியவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். நகராட்சி நிர்வாகம் சார்பில் பல  பணிகளுக்கு ஒப்பந்தம் தரப்படுகிறது. அப்படி தரும் பட்சத்தில் அவர்கள் யார் ? அவரது செல்நம்பர் ?  என்னென்ன பணிகளுக்கு ? எவ்வளவு காலகட்டத்தில் ? எவ்வளவு தொகைக்கு ? ஒப்பந்தம் எடுத்துள்ளனர் என்பதை நகராட்சி அலுவலகம் நோட்டீஸ் போர்டில் ஒட்ட வேண்டும். அந்த விளம்பரத்தை கண்காணிப்பதுடன் ஒப்பந்த பணி முடிந்தால் அப் பணி மீண்டும் அவர்களுக்கே தரப்படுகிறதா ? தொகை மற்றும் காலகட்டம் மாற்றங்களையும் தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

ஏதாவது நடந்ததா ? கடைசியாக விடப்பட்ட 3 ஒப்பந்தங்கள் யாருக்கு எவ்வளவு தொகைக்கு விடப்பட்டது என்பதை உடனே கூற முடியுமா ? உறுப்பினர்கள் ஞாபகம் இல்லா விட்டாலும் பரவாயில்லை நகராட்சி அலுவலருக்கு தெரியுமா ? கம்யூட்டரில் பார்த்து சொல்கிறேன் என கூறுவார்கள்.

அடுத்து நகர் மன்ற தலைவர் அறையின் A/C சரிசெய்ய ₹22 ஆயிரம் செலவு செய்யாமல் புதிதாக ஒன்றை வாங்குங்கள் என கூறினேன். அப்படி வாங்கியிருந்தால் 5 வருட வாரண்டியுடன் ₹ 35 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. இப்ப இது 3 மாசத்துக்கு பிறகு மீண்டும் அதில் வேலை வரும்.

அடுத்து கீழக்கரை நகராட்சியின் வரிவிதிப்பு குழு கமிட்டி உறுப்பினராக இருக்கிறேன் இதனால் என்ன பயன் என தெரியவில்லை. பொதுமக்களிடம் கெட்ட பெயரை தான் உண்டாக்கி உள்ளது. சத்தமில்லாமல் பலருக்கு வரியை உயர்த்தி உள்ளனர். அதில் சிலர் நீங்கள் வரிவிதிப்பு கமிட்டியில் தானே இருக்கிறீர்கள்? ஏன் இப்படி வரி அதிகமாக வருகிறது. குறைக்க சொல்லுங்க என கேட்பவருக்கு ஏமாற்றத்தை மட்டுமே பதிலாக தர முடிகிறது.

கீழக்கரை புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனை நடப்பதாக கூறுகின்றனர். அதற்கு நகராட்சி உதவுகிறதா ? என்ற சந்தேகம் எழுகிறது. அங்குள்ள ஒரு கடையை பற்றி அதிகாரிகளை பார்த்து  கேட்கிறேன். முதலில் அந்த கடை உள்ள இடம் நகராட்சிக்கு சொந்தமான இடமா ?*
*சொந்தமான இடம் என்றால் கடையாக கட்டியது யார்?

அப்படி என்றால் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தனிநபர் எடுத்து கொள்ளலாமா ?
 

அப்படியே அவர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் நாம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமே ஒழிய ஆதரவு தர கூடாது. கடை நடத்தி வருபவரிடம் கேட்டால் நகராட்சிக்கு வாடகை தருவதாக கூறுகிறார். இந்த வாடகை யாருக்கு போகிறது ? நகராட்சி கணக்கில் வருகிறதா ? தனிநபர் பைகளில் போய் சேருகிறதா ? எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

இந்த கூட்டத்தில் வைக்கப்பட்ட 18 பொருட்கள் அடங்கிய தீர்மானத்திலும் பல லட்சங்கள்  பொதுமக்கள் பணம் வீணடிக்க படுகிறது. குறிப்பாக பொருள் எண் 13, மற்றும் 14ல் ஆழ்துளை கிணறு மின்மோட்டார், கழிவுநீர் மின் மோட்டார் பழுதுக்கென தலா 3/ லட்சம் வீதம் 6 லட்சம் வீண் செலவு என தெரிந்தும் நான் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்கி நிற்கிறது.

அதேபோல் பொருள் எண் 17ல் நகராட்சி வாகனங்களுக்கு வாங்கப்படும் டயர்கள் ₹1,80 ஆயிரத்திற்கு வாங்காமல் ஏற்கனவே இருந்த ஸ்மீத் கம்பெனி பொருப்பில் இருந்தால்  வாகனங்களுக்கு செலவு செய்யும் தொகையானது  கம்பெனி கணக்கில் சென்றிருக்கும். ஆனால் வாகன செலவையும் நகராட்சி ஏற்று பொதுமக்களின் பணம் பெரிதும் வீணடித்து யாரோ ஒரு சிலர் பயனடைவது வருத்தம் அளிக்கிறது. ஆகவே உடனடியாக இந்த ஒப்பந்தத்தை பெரிய கம்பெனிக்கு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி கீழக்கரை வாழ் பொது மக்களுக்காக நான் சொல்லும் எதுவும் நடக்காமல் போகிறது. அதுவும் பொதுமக்கள் பாதிப்படையும் வண்ணம் எதிராகவும் உள்ளது. ஆகவே கீழக்கரை பொதுமக்களிடம் எனது  மன்னிப்பை கேட்டு கொண்டும்,  நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நான் வெளி நட்ப்பு செய்கிறேன்.என கூறி  நகராட்சி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.
     

நகராட்சி நிர்வாக சீர்கேடைப் பற்றி பேசிய சேக் உசேன் அவர்களுக்கு பொதுமக்களின் பாராட்டும், இது போன்ற விசயங்களை துணிச்சலாக  வெளிக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்ப்பும் மேலோங்கி நிற்கிறது.

காதர்