முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில் வழக்கை ஏற்றது நீதிமன்றம்.!

திருப்பத்தூர்

முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில் வழக்கை ஏற்றது நீதிமன்றம்.!

ஏப்ரல் 1ஆம் தேதி முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு.!

முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கானது தற்போது திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கை ஏற்று தொடர உத்தரவிட்டுள்ளது வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2021 ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கே.சி.வீரமணி மீது ராமமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். கே.சி.வீரமணி மீதான புகாரில் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ராமமூர்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி.வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 கே.சி.வீரமணி தனது பிரமாணப் பத்திரத்தில் ஏராளமான சொத்துகளை மறைத்திருப்பதை கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இதனை திருப்பத்தூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம் சட்டமன்ற தேர்தல் அலுவலர் அளித்த கோப்புகளை வைத்து பரிசீலனை செய்து இதன் அடிப்படையில்  திருப்பத்தூர் ஜே எம்,1 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு. இந்த வழக்கானது  திருப்பத்தூர் ஜேஎம் நீதிபதி மகாலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் நந்தகுமார் மற்றும் வீரமணி வழக்கறிஞர் ஜான் சக்தி ஆஜரானார்கள் அப்போது விவாதங்கள் நடைபெற்றது அந்த விவாதத்தின் போது இந்த வழக்கு காலம் கடந்து தொடரப்பட்டுள்ளது எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோப்புகளின் அடிப்படையில் வீரமணி வழக்கறிஞர் வாதாடினார்.

அதன் பிறகு அரசு வழக்கறிஞர் வாதாடும் போது தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்த வழக்கானது தொடரப்பட்டுள்ளது இந்த வழக்கின் மீது வழக்கை தொடர்ந்து நடத்தி விசாரணையின் போது இந்த வழக்கை நீதிபதி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி மகாலட்சுமி இந்த வழக்கை வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

பின்னர் இந்த வழக்கை ஏற்று நடத்த கோர்ட் ஒப்புக்கொண்டு அனைத்து ஆவணங்களும் போலியானது என்று தெரிய வருகிறது இதனால் இந்த வழக்கை கோர்ட் ஏற்று நடத்தும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்

ந.வெங்கடேசன்