அரக்கோணத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி 50க்கும் மேற்பட்ட மக்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்
மேலூர்
அரக்கோணம் கணேஷ் நகர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி 50க்கும் மேற்பட்ட மக்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்
அரக்கோணம் கணேஷ் நகர் பகுதியில் சாலை குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கூறி நகராட்சி அதிகாரியிடம் ஆணையாளரிடமும் பலமுறை புகார் மனு அளித்திருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் எனவும் மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் கழிவுநீர் வெளியிடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நகராட்சி சார்பில் வரிவசூல் செய்ய வரும் நபர்கள் வரி கட்டவில்லை என்றால் தங்கள் வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டி செல்வோம் என்று மிரட்டல் ஆகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர் அடிப்படை வசதி செய்து தராத எங்கள் பகுதியில் நாங்கள் எப்படி வரி செலுத்துவோம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து அனைவரும் கடந்து சென்றனர் இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
பேட்டி: பிரியா (அரக்கோணம்)
செய்தியாளர்
ஆர்ஜே. சுரேஷ்