திருப்பரங்குன்றம் மலை.. இறைச்சி சர்ச்சை. என்ன நடக்கிறது மதுரையில்?
மதுரை
மதுரை திருப்பரங்குன்றம் சம்பந்தமாக நவாஸ்கனி எம்.பி.இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன?
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியை கண்டித்துள்ள இந்து முன்னணி அமைப்பினர் மலையைக் காக்க போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஒரு பக்கம் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபக்கம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவும் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு திருவிழா ஜனவரி மாதம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் நடப்பாண்டு சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 18ஆம் தேதி காலையில் ஆடு, கோழிகள் பலிகொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலி கொடுக்கக் கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி விழா நடக்கும் என ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அப்போது தர்ஹாவில் கந்தூரி விழாவுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட உயிரினங்களை பலியிட கொண்டு சென்ற இஸ்லாம் அமைப்பினரிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தர்ஹாவிற்கு சென்று வழிபடுவதற்கு எந்த தடையும் கிடையாது என்றும், ஆனால் உயிரினங்களைப் பலியிடுவதற்கு இப்போது அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த காலங்களில் அவற்றைக் கொண்டு செல்ல அனுமதி இருந்ததாக எங்கள் விசாரணையில் தெரிய வந்தால் உங்களை கண்டிப்பாக அனுமதிக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் போலீசாரின் பேச்சுவார்த்தையை கேட்டுக்கொண்டு அங்கிருந்து ஐக்கிய ஜமாத் அமைப்பினர் கலைந்து சென்றனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் முருகனின் வேலை வைத்து கண்டன ஊர்வலம் நடத்தினர். இந்த விவகாரங்களை தொடர்ந்து இரு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மீதும் திருப்பரங்குன்றம் போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக உள்ள ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, ஜனவரி 22ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு நடத்த சென்றார்.
இதுதொடர்பாக புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். அதில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், தர்காவும் குறிப்பிட்ட அவர் எந்த மக்களும் சிரமமி இன்றி பிரச்சனையை தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டிருந்தார். மேலும் ஆடு, கோழிகளை எடுத்துச் செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து காவல் ஆணையர் விளக்கியதாக தெரிவித்த நவாஸ் கனி, சமைத்த உணவை மலைக்கு மேல் எடுத்து செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதாக தெரிவித்தார். அதோடுமட்டுமல்லாமல் அசைவ உணவு எடுத்து மக்கள் சாப்பிட்டதாக சிலப் புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
அதில் ஒரு படத்தில் மலையின் பாதையில் இருக்கும் தர்கா செல்லும் படிக்கட்டில் மூன்று பேர் இறைச்சி பிரியாணி சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் கோவிலின் புனித தன்மை கெட்டுள்ளதாக இந்துத்துவா அமைப்புகள் விமர்சிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக நவாஸ்கனி எம்.பி. இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.
வீடியோ யூடியூப் லிங்க் மேலே உள்ளது.