திருப்பத்தூரில் பேருந்துக்காக காத்திருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்தவர் போக்ஷோவில் கைது.!
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் பேருந்துக்காக காத்திருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது !
கிராமிய போலிசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் கோவிலில் கட்டுமான வேலை நடைபெற்று வருகிறது.அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி அந்த கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு கட்டிட வேலை செய்து வந்த ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த முனிரத்தினம்(56) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.இதை அந்த சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்