வேளச்சேரி காவல் நிலையத்தில்விசாரணைக்கு அழைத்து வரபட்ட நபர் காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. !

சென்னை

வேளச்சேரி காவல் நிலையத்தில்விசாரணைக்கு அழைத்து வரபட்ட நபர் காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. !

வேளச்சேரி காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து வரபட்ட நபர் காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. 

உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே விழுந்தவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் இன்று காலை 7.30 மணி அளவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர் திடீரென காவல் நிலையத்தின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

கீழே விழுந்ததில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார் இதனை அடுத்து காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இருப்பினும் தலையில் பலத்த காயம் அடைந்ததால் அவரை அங்கிருந்து நந்தம்பாக்கத்தில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுரை வழங்கியதை அடுத்து அங்கு  கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் காயம் பட்டவருக்கு சுயநினைவு வந்த பிறகு தான் அவர் யார் என்பதும் எதற்காக மாடியில் இருந்து குதித்தார் என்ற தகவல்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

காவல் நிலையத்தின் மாடியில் இருந்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்

        S S K