நங்கநல்லூர் மதுக்கடையில் முதல்வர் மற்றும் அமைச்சர் போட்டோக்களை ஒட்டிய பா.ஜ.க.வினர் கைது.!

சென்னை

நங்கநல்லூர் மதுக்கடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி புகைப்படம் ஒட்டிய பாஜகவினர் 8 பேர் கைது. 

சென்னை நங்கநல்லூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் சென்னை கிழக்கு மாவட்ட, நங்கநல்லூர் பகுதி பாஜகவினர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை மதுக்கடையில் ஒட்டினர்.

தகவலறிந்து வந்த பழவந்தாங்கல் போலீசார் பாஜக நிர்வாகிகளான மீனாட்சி, தங்க சோபனா, வேதகிரி, வினோத் குமார், வீரா(எ) வெங்கடேசன், ராஜேஷ், செல்வம், ஜெயகுமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் பழவந்தாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.