ஆட்சியர் அலுவலகத்தில் கை குழந்தைகளுடன் புகார் மனு வழங்கிய நரிக் குறவர் இன மக்கள்.!
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம
தலைமுறை தலைமுறைகளாக வீட்டுமனை வழங்கியும் பட்டா வேண்டுமென கூறி பலமுறை நடையாய் நடந்து மனு கொடுத்தும் அதிகாரிகளிடம் எந்த ஒரு பதிலும் இல்லாததால் ஆட்சியர் அலுவலகத்தில் கை குழந்தைகளுடன் புகார் மனு வழங்கிய நரிக் குறவர் இன மக்கள்.!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தலைமுறை தலைமுறைகளாக வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் தலா குடும்பத்திற்கு 3 சென்ட் வீதம் அளவீடு செய்து இடம் வழங்கப்பட்டது இதனை அடுத்து இதுவரை அந்த இடத்திற்கான உரிய பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது..
மேலும் இதுகுறித்து பட்டா கேட்டு நரிக்குறவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரை அணுகியும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டிய நரிக்குறவர்கள் இது சம்பந்தமாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்பம் குடும்பமாக கவி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
செய்தியாளர்
அருள் அரசன்