12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த சுமார் 12 மாணவர்களை பாராட்டி கல்வி உதவித் தொகை.!

சென்னை

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த சுமார் 12 மாணவர்களை பாராட்டி கல்வி உதவித் தொகை.!

கேளம்பாக்கத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த சுமார் 12 மாணவர்களை பாராட்டி கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கி கௌரவித்த திமுக கிளை கழக செயலாளர் கே.ஏ.டி அன்பு.!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் சமுதாய சேவகரும் திமுக கிளை கழக செயலாளருமான கே.ஏ.டி அன்பு..மற்றும் ஜோதி நகர் திமுக கிளை கழக மகளிர் அணி செயலாளருமான தனக்கோட்டி அன்பு ஆகியோர்  திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் மேற்கொண்டு வரும் மாணவர்களின் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்று கேளம்பாக்கத்தில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி படிக்க உதவி செய்வது,இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வண்ணம் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, ஆதரவற்ற பெண்களுக்கு நிதி உதவி வழங்குவது, என பல்வேறு சமுதாய பணிகளை செய்து வரும் இவர் தற்போது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு  அரசு பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த  மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் சுமார் 12 மாணவர்களுக்கு கல்வி நிதியும் கல்வி உபகரணங்களும் வழங்கி கௌரவித்தனர்.

திருப்போரூர் ஒன்றியத்திலேயே முதல் நபராக நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து கல்வி உதவித்தொகை வழங்கியும் கல்வி உபகரணம் வழங்கியதை மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கே.ஏ.டி. அன்பையும் திருமதி தனக்கோடி அன்பையும் வெகுவாகப் பாராட்டினர் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய பணியில் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர்.கேளம்பாக்கம் ஊராட்சி மட்டுமின்றி கேளம்பாக்கத்தை சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகளில் இருந்தும் தங்களை நாடி வருபவர்களுக்கு ஒசை இன்றி தங்களால் முடிந்த உதவிகளை இன்றளவும் இருவரும் செய்து வருவது  குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்

    சுகுமாரன்