மக்களுக்கான அரசு, மீனவர்களுக்கான அரசு தான் திராவிட மாடல் அரசு! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். !

சென்னை

மக்களுக்கான அரசு, மீனவர்களுக்கான அரசு தான் திராவிட மாடல் அரசு!

திமுக ஆட்சியில் தினம் தினம் மகளிர் தினம் தான்!

2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திரையிலும் தரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இரண்டு மணி நேரம் வெயிலில் நிகழ்ச்சியில்  பங்கேற்றுள்ளார்  நமது துணை முதலமைச்சர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194 வது அ வட்ட திமுக சார்பில், மாமன்ற உறுப்பினர் விமலாகர்ணா தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நைனார் குப்பம் முதல் ஊரூர் வரை 13 கிராமங்கள் பங்குபெறும் மாபெரும் படகு போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கலந்து கொண்டு படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதிய படகுகளை பரிசாகவும், மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

13 மீனவ கிராமங்களில் இருந்து 52 போட்டியாளர்கள், துடுப்பு படகிற்கு இரண்டு பேர் வீதம் பங்கேற்றனர். முதல் பரிசை கொட்டிவாக்கம் மீனவர் மோகன், கண்ண தட்டிச் சென்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசை ஈஞ்சம்பாக்கம் தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, மோட்டாருடன் கூடிய படகு, இரண்டாவது பரிசு மோட்டார் இல்லாத படகு, மூன்றாவது பரிசு படகு மற்றும் மீன்வலை வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் தென் சென்னை  நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் மற்றும் பிரபாகர் ராஜா மற்றும் மீனவ கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, 

வெற்றி பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுற்றுப்பயணத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்தனர் இது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது சரி செய்யப்படும். இது மகளிருக்கான ஆட்சி.

நரிக்குறவர் மக்கள் எங்களுக்கு வீடு கட்ட நிலமும் அதற்கான நிதியும் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அடுத்த ஆறு மணி நேரத்தில் அவரது இல்லம் சென்று பட்டா வழங்கியது தான் திராவிட மாடல் அரசு.

இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து எல்லா நாட்களும் மகளிர் தினம் தான்

முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் முதல் கையெழுத்து மகளிர் கட்டணமில்லா பயணம் தான். காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இதுபோன்றே எண்ணற்ற திட்டங்கள் உள்ளது.

மீனவர்களுக்கு நிதியை 25000 ஆக உயர்த்தி வழங்கினார். மீனவர்கள் உரிமைத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்ற முறையை  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றியவர் முதலமைச்சர்.

மக்களுக்கான அரசு, மீனவர்களுக்கான அரசு, திராவிட மாடல் அரசு

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மற்றொரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள் அல்லவா நீங்கள் தான் கடவுள். உங்களை தான் நான் கடவுளாக பார்க்கிறேன்.

2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மீனவர்கள் மீதுள்ள நம்பிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் அவர்களை மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராக களப்பணி ஆற்றி அமர வைக்கும் பொறுப்பு உங்களுக்கும் உள்ளது என தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடையில் பேசுகையில், 

எந்த முதலமைச்சரும் புயல் பாதிப்பை நேரடியாக களத்திற்கு வந்து ஆய்வு செய்தது இல்லை.

மீனவர்களுக்கு தனி மாநாடு நடத்தி 1000 கோடி நிதி மீனவர்கள் நலனுக்கு ஒதுக்கியவர் முதலமைச்சர்.

மீனவர் நலனுக்கு பாடுபடும் துணை முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. 

திரையிலும் தரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இரண்டு மணி நேரம் வெயிலில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நமது துணை முதலமைச்சர் என மீனவர்கள் கூறிச் சென்றனர்.

செய்தியாளர்

S S K