சேத்துப்பட்டு நண்பர்கள் பொது அறிவு சங்கத்தின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா!
சென்னை

சேத்துப்பட்டு நண்பர்கள் பொது அறிவு சங்கத்தின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா!
சென்னை சேத்துப்பட்டு நண்பர்கள் பொது அறிவு சங்கத்தின் சார்பாக பாபா ~ சாகேப் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மங்கலபுரம் பகுதி அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நண்பர்கள் பொது அறிவு சங்கத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற சி எம் டி ஏ அதிகாரியுமான வீ.குமார், பொதுச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரியுமான வீ.ரகுநாதன், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் பெ. மணி, அ.குணசேகரன், ச.மனோகர், ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு, திண்டிவனம் நகராட்சி ஆணையர் கே.பி.குமரன், சங்கத்தின் பொருளாளர் அய்யநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
சுகுமாரன்