மேட்டுப்பாளையம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அரசு அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம்.!
மேட்டுப்பாளையம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியயாகிய அண்ணாஜிராவ் ரோடு மற்றும் சிறுமுகை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்க அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர், துணை வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அதிகாரிகள் அண்ணாஜிராவ் ரோடு மற்றும் சிறுமுகை சாலைகளில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் நேரடியாக சென்று கடைகளை அகற்றி தருமாரும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் பேச்சு வார்த்தை மூலம் எடுத்துக் கூறினர்.
மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றாத பட்சத்தில் அரசே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்பதையும் கூறி வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )