குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் இளைஞரை மிரட்டி 2000 ரூபாய் லஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.!

சென்னை

குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் இளைஞரை மிரட்டி 2000 ரூபாய் லஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.!

குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் இளைஞரை மிரட்டி 2000 ரூபாய் லஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. 

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட குரோம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து ஆய்வாளர் இல்லாத காரணத்தினால் உதவி ஆய்வாளர் இளையராஜா அந்த பொறுப்பை கவனித்துக் கொண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது அவருக்கு கீழ் செயல்படும் காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். 

3 தினங்களுக்கு முன்பு இரவு TN09DA4124 என்ற இருசக்கர வாகனத்தில் ராஜேஷ்(23), என்ற இளைஞர் குரோம்பேட்டை மேம்பாலம் அருகே உட்புற சாலையில் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் இளையராஜா என்பவர் அந்த இளைஞரை குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக மிரட்டியுள்ளார், அதற்கு அந்த இளைஞர் தான் குடிக்கவில்லை என் கெஞ்சியும் விடாமல் ஆபாசமாக திட்டியதோடு, பீரித்தீங் அனலைசர் கொண்டு எத்தனை முறை ஊதியும் 0% என காட்டியுள்ளது.

இதனால் விரக்தியடைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் இளையராஜா அந்த இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்து போக்குவரத்து காவல்துறையை சேர்ந்த எழுத்தரிடம் கொடுத்துள்ளார். எழுத்தர் நாளை வருமாறு அனுப்பி வைத்து விட்டார், அடுத்த நாள் இளைஞரிடம் 5000 ரூபாய் பேரம் பேசி, இளையராஜா அறிவிறுத்தலின் படி போக்குவரத்து காவலர்கள் சிவா, மகேஷ் ஆகியோர் 2000 ரூபாயை லஞ்சமாக பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தை கொடுத்தனுப்பியுள்ளனர். 

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து போலீசார் சீருடையில் வழிப்பறி கொள்ளையன் போல் செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் போக்குவரத்து போலீசாரின் மிரட்டி பணம் பறிக்கும் யுக்தி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

லஞ்சம் பெற்ற போக்குவரத்து போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக்கிடம் கோரிக்கை வைக்கின்றார் பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா லஞ்சம் பெற்ற போலீசார் மீது என பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தியாளர்

         S S K