மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணங்கள் வழங்கிய அமைச்சர்கள்
Kadalur fenjal cyclone visted ministers

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் முல்லிகிராம்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் சி.வி.கணேஷன் , MRK பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று (02.12.2024) பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மீட்பு பணிகளை ஆய்வு செய்து உணவு மற்றும் நிவாரணம் வழங்கினர்.
https://www.newstodaytamil.com/Chennai-Thiruvallur
உடன் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப., தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., உட்பட பலரும் உடனிருந்தனர்.