மாவட்ட சட்ட சேவை மையம் சார்பில் பசுமை சூழல் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரக்கன்றுகளை நட்டார்.!

கிருஷ்ணகிரி

மாவட்ட சட்ட சேவை மையம் சார்பில் பசுமை சூழல் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரக்கன்றுகளை நட்டார்.!

தேசிய மற்றும் மாநில சட்ட சேவை மையங்களை அணுகி சட்டங்கள் குறித்தும்  மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம் - பசுமையான சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மாவட்ட சட்ட சேவை மையம் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பசுமையான சூழல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா கலந்துக்  கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய நீதிபதி ஹேமலதா ,

நாம் ஒவ்வொருவரும் நாட்டின் தரத்தை மேம்படுத்திட ஒளிச்சேர்க்கை செயல்பாட்டை கொண்டு கார்பன் டையாக்சைடு மரம் செடி, கொடிகள் எடுத்துக்கொண்டு நாம் சுவாசிக்க வேண்டிய ஆக்சிஜனை அது வெளித்தருகிறது. மரங்களை அழித்ததால் தான் காலநிலை மாற்றம் பருவநிலை மாற்றம் பூமி வெப்பமயமாதல் காற்று மாசு அதிகரித்தல் ஆகிய ஆபத்துக்கள் நமக்கு ஏற்படுகிறது. 

எனவே மரம் நடுவதனால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதுடன் இயற்கையான காற்று நமக்கு கிடைக்கிறது. மரங்கள் இயற்கையாகவே வளர முடியாத இடங்களில் நாம் மரம் நடுவதினால் எதிர்காலத்தில் வரும் ஆபத்திலிருந்து நாம் காப்பாற்றப்படுகிறோம். ஆகவே மரம் நடுவதும் அதனை பாதுகாப்பதும் நமது தலையாய கடமையாகும். 

மக்கள் தேசிய மற்றும் மாநில சட்ட சேவை மையங்களை அணுகி சட்டப் பிரச்சினைகளை மட்டும் தெரிந்து கொள்வதுடன் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். நீதித்துறையில் அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு சட்ட சேவை மையம் செயலாற்றி வருகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் சட்டத்துறையில் ஆலோசனைகளை பெற்று அதற்கான பயன்களை முழுமையாக அடைவதற்கு நேரடியாக சட்ட சேவை மையங்களை அணுகி தீர்வு பெறலாம் என கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி லதா மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ