இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் உறுதியானது. !

இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் உறுதியானது. !

ஈரான், ஜூன் 24 : இஸ்ரேல் (Israel) உடனான போரை நிறுத்துவதாக ஈரான் (Iran) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு (Iran - Israel Ceasefire) சம்மதம் தெரிவித்து இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என ஈரான் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக பதற்றம் நிலவிய நிலையில், தற்போது போரை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நிலையில், போர் நிறுத்தம் குறித்து ஈரான் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த டொனால்ட் டிரம்ப்

அணு ஆயுத உற்பத்தி (Nuclear Weapon Production) விவகாரத்தில், ஈரான் தன் மீது தாக்குதல் நடத்தும் என்பதால் ஜூன் 13, 2025 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஈரானின் முக்கிய இடங்களை கூறி வைத்த தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் தி ட்ரூ பிராமிஸ் 3 (Operation The True Promise 3) என்ற பெயரில் ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நீடித்து வந்த நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மறுப்பு தெரிவித்த ஈரான்ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் குறித்து தற்போது எந்த உடன்பாடும் இல்லை என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பதற்றம் நீடித்தது.

அதிகாரப்பூர்மாக அறிவித்த ஈரான்

முன்னதாக இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் குறித்து எந்த உடன்பாடும் இல்லை என்று ஈரான் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் மோதல்கள் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.