ஊத்தங்கரை அருகே தரைப்பாலத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே தரைப்பாலத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி உள்வட்டம் மற்றும் தரப்பு, சாமல்பட்டி ரயில்வே பாலம் அடியில் இன்று மாலை 4.30 மணியளவில் ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும் கிருஷ்ணகிரியிலிருந்து ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபதுக்குள்ளானது.
இந்த விபத்தில் 30 க்கும் மேற்பட்டோற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை அருகில் உள்ள சாமல்பட்டி அரசு மருத்துவமனைக்கும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும் படுகாயம் அடைந்தவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அழைத்து வந்து உயர்சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ச. தினேஷ் குமார் இ. ஆ. ப அவர்கள், வருவாய்த்துறை, காவல்துறை , இணை இயக்குனர் மருத்துவப் பணிகள், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.
நல்வாய்ப்பாக மேற்படி சம்பவத்தால் உயிர் சேதம் ஏதுமில்லை. தனியார் பேருந்து ஓட்டுனர் காலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
மாருதி மனோ