அதிமுக துணை பொதுச்செயலாளரின் 74 வது பிறந்தநாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளுடன் 74 கிலோ கேக் வெட்டி தென்னங்கன்றுகளை வழங்கிய அதிமுகவினர்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளரின் 74 வது பிறந்தநாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளுடன் 74 கிலோ கேக் வெட்டி தென்னங்கன்றுகளை வழங்கிய அதிமுகவினர்.
அதிமுகவின் துணை பொதுசெயலாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான கேபி.முனுசாமி அவர்களின் 74 வது பிறந்தநாளான இன்று மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் சார்பில் அன்னதானம், நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கேபி முனுசாமி அவர்களின் பிறந்த நாளையொட்டி வரதராஜ சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைதொடர்ந்து சூளகிரி ரவுண்டானாவில் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 74 கிலோ எடையிலான கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புடன் அன்னதானமும் வழங்கப்பட்டன.
பின்னர் பொதுமக்களுக்கு இலவசமாக அதிமுகவினர் தென்னை மரக்கன்றுகளை வழங்கினர். அதனைதொடர்ந்து சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளியில் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் மல்லையன், மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வி, கழக நிர்வாகி கே டி ஆர் என்கின்ற திமிராஜ், சூளகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்கள் பாலசுப்ரமணிய, சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் SVS மாதேஷ், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் பாபு, சூளகிரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அஸ்வத் நாராயணா, வேணும், கழக நிர்வாகி கேசவன், பாசறை மாவட்ட இணை செயலாளர், லோகேஷ், ஒன்றிய செயலாளர் மஞ்சு, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வரலட்சுமி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட நிர்வாகி அம்பரீஷ், ஒன்றிய நிர்வாகி கனகராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் கேசவா,ஒன்றிய துணை செயலாளர்கள் முனி கிருஷ்ணா, சத்யா, சக்தி, முன்னாள் அவைத் தலைவர் மணி, கழக நிர்வாகிகள் ரங்கநாத், சிவா, ஜெயசங்கர், நாகேஷ் வெங்கடேஷ், மூர்த்தி, சிவக்குமார், வெங்கடேஷ், மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ