மேட்டுப்பாளையத்தில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை.! காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்த ஜமாத்தார் .!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை.! காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்த ஜமாத்தார் .!

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்  புனிதமிகு பக்ரீத் பண்டிகை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அமைதியாக சென்று , இறைவனைத் தொழுது , நன்றி செலுத்தி , இல்லாதவர்களுக்கும் , இயலாதவர்களுக்கும் இயன்றதை தர்மம் செய்து மிகவும் சிறப்பாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது . 

மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் இருந்து ஈத்கா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் .

இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஜமாஅத் தார்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்து நெரிசலை சரி செய்த Volunteers சகோதரர்களுக்கும் , அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்பு பணியினை சிறப்பாக ஏற்பாடு செய்த காவல் துறையினருக்கும் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் ஐக்கிய ஜமாத் சார்பாகவும் (ஜஸாகல்லாஹ் ) நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR ) 

செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு

                      97 87 41 64 86