மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். !
மேட்டுப்பாளையம்

கோவையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் 113 கோடி ரூபாய் அளவில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டில் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் 27-04-2025 மாலை 4:30 மணியளவில்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹ்ரிபா பர்வீன் அஷ்ரப்அலி, நகராட்சி ஆணையாளர் அமுதா ,
நகர மன்ற துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி, மமக 6 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அ.ஸமீனாபேகம் அப்துல்ஹக்கீம்M.C , 8 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கொ.ம.தே.க. புவனேஸ்வரி , நகராட்சி நிர்வாகம், JE மனோகர், மருத்துவ அலுவலர் பிரபு .த ,செவிலியர் நாகசூரியா,
பகுதி சுகாதார செவிலியர் மும்தாஜ் ,
துணை செவிலியர் கவிதா , முஹம்மது அப்பாஸ் மமக மாவட்ட செயலாளர், முஹம்மது நசீர், யாசர் ,பாசில் மற்றும்
பொதுமக்கள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
இறுதியாக மக்கள் பயன்பாட்டிற்கு அரசு நகர்ப்புற துணை ஆரம்ப சுகாதார நிலையம் வருவதற்கு ஒத்துழைப்பு நல்கிய மருத்துவர்கள், நகர மன்ற தலைவர், நகர மன்ற துணை தலைவர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் 6 வது வார்டு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார் நகரமன்ற உறுப்பினர்ர் அ.ஸமீனா பேகம் அப்துல் ஹக்கீம்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )