ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின்  ஆண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள்.!

கிருஷ்ணகிரி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின்  ஆண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள்.!

மேல்பூங்குருத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 
ஆண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழக அரசு அரசு பள்ளிகளிலும் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு இடையே கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது 

இதன் அடிப்படையில்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  
மேல் பூங்குருத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

பள்ளி ஆண்டு  விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் திருமதி மாதேஸ்வரி தலைமையில் நடைப்பெற்ற இத்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி செல்வராணி  விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

பின்னர் இவ்விழா முன்னதாக முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவர்களை கெளரவிக்கும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பார்த்திபன் , ஆசிரிய பயிற்றுநர்  ஜெயசீலன் வாழ்த்துரை வழங்கி பள்ளி ஆண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து. இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்பட்ட இத்த அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் ஏராளமான பொதுமக்களும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்,

மேலும் இவ்விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உதவி ஆசிரியர் கணேசன் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ