தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவராக வேளாண்மை துறை சுப்பிரமணியன் மீண்டும் தேர்வு .!

தென்காசி

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவராக வேளாண்மை துறை சுப்பிரமணியன் மீண்டும் தேர்வு .!

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவராக வேளாண்மை துறை சுப்பிரமணியன் மீண்டும் தேர்வு

தென்காசி ஜூன் 23 

தென்காசி அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் வைத்து அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தென்காசி மாவட்ட மையத்தின் 2025-28 ஆம் வருட தேர்தல் நடைபெற்றது.

தேர்தலை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளரும், தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான நாஞ்சில் நிதி நடத்தினார். இதில் போட்டியின்றி ஒரு மனதாக மாவட்ட தலைவராக வேளாண்மை துறை சுப்பிரமணியன், செயலாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அந்தோணி ராஜ், பொருளாளராக பொதுப்பணித்துறை ராம் பிரசாத், துணைத் தலைவர்களாக கல்வித்துறை பாலமுருகன், கூட்டுறவுத்துறை சுரேஷ், பொது நூலக துறை வெற்றி வேலன், மருத்துவத்துறை மேடை ஈஸ்வரி, ஊரக வளர்ச்சித்துறை சுடலை, மாவட்ட அமைப்புச் செயலாளராக பொது சுகாதாரத்துறை ஜோசப், மாவட்ட பிரச்சார செயலாளராக மருத்துவத்துறை பேச்சியப்பன், இணை செயலாளர் கல்வித்துறை மாரியப்பன், உன்னத ஜெயக்குமார் என்ற ஜெயராஜ், கூட்டுறவு தணிக்கை துறை வெங்கடாஜலபதி, நில அளவை துறை வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளராக கருவூல கணக்குத் துறை அனுசுயா, மத்திய செயற்குழு உறுப்பினராக வெள்ளத்துரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய திருநெல்வேலி மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் பாளையங்கோட்டை வட்டக்கிளை தலைவர் செந்தில்குமார் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தென்காசி வட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்