சிகரம் தொட்ட சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா.!

தென்காசி

சிகரம் தொட்ட சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா.!

தென்காசியில் சிகரம் தொட்ட சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்

தென்காசி ஏப் 25

தென்காசி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 2024-25 சிகரம் தொட்ட சாதனை யாளர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி தென்காசி இ சி ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய், தென்காசி தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், கடையநல்லூர் எவரெஸ்ட் கல்வி குழும தாளாளர் டாக்டர் முகைதீன் அப்துல் காதர் டி ஏ எஃப் ஐ ஏ எஸ் அகாடமி பொது மேலாளர் செந்தில் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் சுரேஷ் குமார் தொகுப்புரை வழங்கினார்.  குலைய நேரி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுக நயினார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் சாதனையாளர் களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர் சுலைகாள் பேகம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர் முடிவில் புளியங்குடி ஏவிஎஸ் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள் சாமுவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்