தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம். !

தென்காசி

தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம். !

தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தென்காசி எம்.எல்.ஏ., மற்றும் சுரண்டை நகர்மன்ற தலைவரிடம் வாழ்த்து பெற்றனர்

தென்காசி ஜூன் 10

 தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நடந்து முடிந்த தேர்தலில் தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 2  வது முறையாக போட்டியிட்ட சுரேஷ் இளவரசன் என்ற வைகோ 4,532 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதேபோல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைவருக்கு போட்டியிட்ட நஸ்ரின், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தலைவருக்கு போட்டியிட்ட மாரிமுத்து, தென்காசி சட்டமன்ற தொகுதி தலைவருக்கு போட்டியிட்ட மகேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைவருக்கு போட்டியிட்ட பிரபாகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இவர்கள் சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் எம்.எல்.ஏ., மற்றும் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எம்.எல்.ஏ., மற்றும் சுரண்டை நகர்மன்ற தலைவர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.

இந் நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் பால்துரை, செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் கதிரவன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், கீழப்பாவூர் பேரூர் காங்கிரஸ் தலைவர் சிங்கக்குட்டி (எ) குமரேசன், இலக்கிய அணி மாநில துணைத் தலைவர் பொன்.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் பால் (எ) சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள் தேவேந்திரன், மாரிமுத்து, ஐ.என்.டி.யு.சி., தமிழ்நாடு தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் கஸ்பா செல்வம், பெரிய பிள்ளைவலசை கிராம காங்கிரஸ் தலைவர் சாய்பு, சுரண்டை நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயராணி, அமுதா சந்திரன், சுரண்டை நகர செயலாளர் கந்தையா, சாந்தி அகாடமி நிறுவனர் ரமேஷ், ஆனந்த், பிரபாகரன், அரவிந்த் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்