இலஞ்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி. !
தென்காசி

இலஞ்சியில் உலக சுற்றுச்சூழல் தினம்
தென்காசி. ஜூன் -10
இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல் நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடை பெற்றது. இவ் விழாவிற்கு உதவி தலைமையாசிரியர் சித்திரசபாபதி தலைமை தாங்கினார்.
அறிவியல் ஆசிரியர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் வீரகாளி வரவேற்றார்
தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரம் நட்டு வைத்தார்.
வன உயிரின ஆய்வாளர் முனைவர் பிரவின்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்கள் பசுமை காக்க உறுதிமொழி ஏற்க செய்து சூழலை காக்க உயிரி பன்மயத்தன்மையை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் மாணவர்கள் பாலிதீன் தவிர்போம், மஞ்சப்பை கையிலெடுப்போம், மழைநீர் சேகரிப்போம், மண்வளம் காப்போம்
போன்ற கோசங்களுடன் நகரின் முக்கிய வீதிகளை வலம் வந்தனர். முடிவில் ஆசிரியர் பெனிட்டா நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்