தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் அவலம்.!

தென்காசி

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் அவலம்.!

தென்காசி அரசு தலைமை மருத்துவ மனையில்

விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லை என மாவட்ட கவுன்சிலர் குற்றச்சாட்டு.


தென்காசி, மே:- 28

தென்காசி மாவட்டம் அச்சன்பதூர் பகுதியைச் சேர்ந்த மைமுன் என்பவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. உடனடியாக தென்காசி அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு பணியில் இருந்த மருத்துவர் தாமதமாக வந்ததாகவும், முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் இது குறித்து விசாரிக்க நேரில் சென்ற மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கனிமொழி மருத்துவர் இடையே பேசியது வாக்குவாதமாக மாறியது. மேலும் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லை இது குறித்து அமைச்சரிடம் உரிய புகார் அளிக்கப்படும் என மருத்துவரிடம் காட்டமாக பேசினார்.

இது குறித்த வீடியோ காட்சி தென்காசி மாவட்டத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து பாதிக்கப்பட்ட மைமுன் கூறுகையில்,

விபத்து நடந்த நிலையில் தான் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்
பட்டதாகவும், தனக்கு அங்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் செய்தனர். இந்த நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பிய மாவட்ட கவுன்சிலருக்கும் மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது எனவும் கூறினார். 
அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்