ஆலங்குளத்தில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் .!
தென்காசி

ஆலங்குளத்தில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி ஜூன் 22
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தேர்தல் பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சந்துரு சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ், ஆலங்குளம் தென்காசி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பிரின்ஸ் மாதவன், சங்கரலிங்கம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் டல்லஸ் விழா பேருரை ஆற்றினார். ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் அருணா வரவேற்புரை ஆற்றினார். இதில் ஆலங்குளம் தென்காசி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் பூத் ஒன்றுக்கு ஐந்து நபர்கள் அமைத்து விரைவாக ஒரு மாத காலத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதள அணி மகளிர் அணி இளைஞர் அணி 250 பேர் ஒரு மாத காலத்திற்குள் சேர்க்க வேண்டும்,ஆகஸ்ட் 29 இல் நடைபெறும் மாவட்டச் செயலாளர் பழனி சங்க இல்ல திருமண விழாவில் கழக பொதுச்செயலாளர் கழக பொருளாளர் இளைஞர் அணி செயலாளர்கேப்டனின் திரை வாரிசு மற்றும் அவைத்தலைவர் தலைமை நிலைய செயலாளர் கொள்கை பரப்பு செயலாளர் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள்
அனைவரையும் சிறப்பாக வரவேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் இசக்கியம்மாள் மகளிர் அணி செயலாளர் சண்முகத்தாய் மாவட்ட துணை செயலாளர் மாரி செல்வம் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கமாரி மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ் பாபு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் சேர்மன் ராமச்சந்திரன் சமுத்திர பாண்டியன் உதயகுமார் சுப்பையா சரவணன் ரவிச்சந்திரன் நெல்லை குமார் ராஜேந்திரன் சரவணன் லிங்குசாமி திருமலை செல்வம் கணேசன் சண்முகம் சேட் ஆனந்த் ஜிந்தா மன்சூர் இசக்கி சுரேஷ் சீனிவாசன் மணி ஆறுமுகம் ஜான்சன் சுடலைமணி இசக்கி கலை இலக்கிய அணிசெல்வராஜ் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குளம் பேரூர் கழக செயலாளர் திருமலை செல்வம் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்