தென்காசி பள்ளிவாசல் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கல்.!
தென்காசி

தென்காசி பள்ளிவாசல் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கல்
தென்காசி ஏப் 25
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து
ஒரு மாதத்தில் ஒரு கோடி மக்களை சந்திப்போம் என்ற உத்தரவை கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஏப்ரல் 10 முதல் மே 10 வரை துண்டறிக்கை வினியோகம் மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக முகம்மது யாகூப் ஆலோசனையின் படி
மாவட்டச் செயலாளர் ஆதம் ஹனீபா தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளிவாசல்
மற்றும் சங்கரன்கோவில் பள்ளிவாசல் ஜும்மாவுடைய தொழுகைக்கு பின்பு மக்களை சந்தித்து ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்தத் சட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் சிக்கந்தர்
மாவட்ட அவைத் தலைவர் செய்யது அலி மாவட்டத் துணைச் செயலாளர் முகமது மன்சூர்
சங்கை இஸ்மாயில்
இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சையத் அலி நகரச் செயலாளர் போரிங் பாதுஷா
நகரப் பொருளாளர் கோபி மற்றும் சங்கரன்கோவில் நகர நிர்வாகிகள் சதாம் சாஜிதீன் மாலிக் மற்றும் மஜக நிர்வாகிகள் பலர்
கலந்து கொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்