உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மாவட்ட அதிகாரிகள். !
தென்காசி

தென்காசி வட்டம் மத்தளம் பாறை கிராமம் சாரல் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் விபத்தில் காயமுற்று நேற்று 26.6.2025 மூளை சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக வழங்கப் பட்டுள்ளது.
மேற்படி இறந்த நபரின் உடல் சொந்த ஊரான மத்தாளம் பாறை கிராமத்திற்கு இன்று (27.6.2025) மாலை 5.30 மணி அளவில் எடுத்து வரப்பட்டது. அன்னாரின் உடலுக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்காசி கோட்டாட்சியர் மற்றும் தென்காசி வட்டாட்சியர் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்
AGM கணேசன்