மேலகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சிறப்பு ஆலோசனைக் கூட்டம்.!
தென்காசி

மேலகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மே 2
தென்காசி தெற்கு ஒன்றியம் மேலகரத்தில்
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் முத்துக்குமார் தலைமையில்
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ராஜா குலசேகர பாண்டியன் மற்றும் தென்காசி சட்டமன்ற பூத் கமிட்டி பொறுப்பாளர் குமார் முன்னாள் தென்காசி தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தென்காசி ஒன்றிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப் படுத்துதல்
பூத் கமிட்டி அமைப்பது தகுதி பெறாத கிளையை தகுதி பெற வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன்
மேலகரம்நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரன்
முன்னாள் சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் அலெக்ஸ் தேவேந்திரன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாடசாமி என்ற செல்லத்துரை, முன்னாள் ஓ பி சி அணி ஒன்றிய தலைவர் மாரியப்பன்,அழகப்பபுரம் சரவணன் பலவேசம் வல்லம் மாரியப்பன், சுந்தரபாண்டியபுரம் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்