ரூ 80 லட்சம் வரை மோசடி செய்த பா.ஜ.க. பிரமுகர் , பாதிக்கப்பட்ட பெண் புகார். !
சென்னை

பெருங்களத்தூரில் பாஜக பிரமுகர் 80 லட்சம் ரூபாய் வரை மனைவி வங்கிக் கணக்கு மூலம் பணத்தை பெற்று திரும்பித் தராமல் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
பிரபல ரவுடிகள் செல்போன் மூலம் மிரட்டுவதாகவும் பேட்டி.
பணத்தை மீட்டுத் தர கோரிக்கை.
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரை சேர்ந்தவர் சுப்ரமணியன் இவரது மனைவி ரம்யா, சுப்ரமணியன் பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார், ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2021, மற்றும் 2022ம் ஆண்டு திருமண தேவை, மருத்துவ தேவை என பல்வேறு காரணங்களுக்காக பாஜகவை சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி பிரிவு செங்கல்பட்டு மாவட்ட தலைவர், தற்போது பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை மண்டல் பொறுப்பாளராக இருக்கும் பழனிவேலன் எங்களுக்கு அறிமுகமானவர், எங்களிடம் பணம் இருப்பதை தெரிந்து கடனாக அவரது மனைவியான தேவகியின் வங்கிக் கணக்கு மூலமாக சுமார் 20 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார்.
அதன் பின் பழனிவேல் பணம் அனுப்ப சொன்னதன் பேரில் விஜயலட்சுமி வங்கிக் கணக்கில் 8 லட்சம் ரூபாய், கணேசன் என்பவருக்கு 4.50 லட்சம் ரூபாய், அமல்ராஜ் என்பவருக்கு 3 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கிலும் அனுப்பியதாகவும், இது போக கைகளில் வாங்கிய பணம் என மொத்தம் 80 லட்சம் வரை பணத்தை பழனிவேலனும் அவர் சார்ந்த ஆட்களுக்கும் இவர் மூலமாக கொடுத்துள்ளோம்.
பணத்தை பெற்ற நாள் முதல் இன்று வரை வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை பீர்க்கன்காரணை காவல் நிலையம், தாம்பரம் துணை ஆணையரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை,
இது போக நெடுங்குன்றத்தில் எங்களுக்கு சொந்தமான 2000 சதுர அடி கொண்ட இடத்தையும் பழனிவேலன் அபகரித்து வைத்துக் கொண்டு அங்கு எங்களை செல்ல முடியாதவாறு அவரது கட்டுப்பாட்டில். வைத்துள்ளார்.
பணத்தை திருப்பிக் கேட்க நான் பழனிவேலனின் பாஜக அலுவலகத்திற்கு சென்றால் அமல்ராஜ் உள்ளிட்ட கட்சியினர் மூலம் ஆபாசமாக மிரட்டி, உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் பணம் கொடுக்க முடியாது என கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் ரவுடிகள் சிலரது பெயரை கூறி மிரட்டுவதாகவும் ஓட்டேரி கார்த்தி என்பவரை வைத்து தங்கள் வழக்கறிஞரை மிரட்டியதாகவும் அது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட ரம்யா என்பவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவகலகத்தில் புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர்
S S K
பேட்டி:- ரம்யா ( பல லட்சம் அனுப்பி பாதிக்கப்பட்டவர்)